Date:

Breakingஇஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: இலங்கையர் நால்வர் காயம்

இஸ்ரேலின் டிமோனா பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை வீடியோ எடுக்க முயன்ற நான்கு இலங்கையர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற போது, குறித்த நால்வரும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தஞ்சம் புகுவதற்குப் பதிலாக, பொது இடத்தில் நின்றவாறு தாக்குதலைப் படம்பிடிக்க முயன்றுள்ளனர். இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றன.

காயங்கள் குறித்த விபரம்:

இது தொடர்பாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார கருத்துத் தெரிவிக்கையில்,

“ஏவுகணை வீச்சினால் அருகில் இருந்த கட்டிடங்களின் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியுள்ளன. இதில் தலையிலும் உடலின் ஏனைய பகுதிகளிலும் கண்ணாடிச் சில்லுகள் குத்தியதில் நால்வரும் காயமடைந்துள்ளனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.”

பாதுகாப்பு அறிவுறுத்தல்:

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

ஏவுகணைத் தாக்குதலுக்கான அபாயச் சங்கு (Siren) ஒலிக்கப்பட்ட மூன்று நிமிடங்களுக்குள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், இக்கட்டான சூழலில் இவ்வாறான ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் இலங்கையர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான…

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம்...

எரிவாயு தட்டுப்பாடு: மக்கள் கடும் அவதி

ஹற்றன் நகருக்குத் தேவையான சமையல் எரிவாயு (Gas) போதுமான அளவு கிடைக்காத...

சினோபெக் , லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் (Sinopec)...

முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்கக் கோரிக்கை

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் விலையைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை...