கட்டார் நாட்டில் அமைந்துள்ள பிரதான இயற்கை எரிவாயு (LNG) மையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. இந்தச் சூழல் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தல் என கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை காலை, ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் கூட்டாகப் பயன்படுத்தும் உலகின் மிகப்பெரிய எரிவாயு மையமான ஈரானின் ‘சவுத் பார்ஸ்’ (South Pars) எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, கட்டாரின் ‘ராஸ் லஃப்பான்’ (Ras Laffan) தொழில்துறை நகரில் அமைந்துள்ள எரிசக்தி வளாகத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.






