Date:

“தேவையற்ற பஸ் பயணங்கள் வேண்டாம்”

தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், அத்தியாவசியமற்ற நேரங்களில் இடம்பெறும் சேவைகளைக் கட்டுப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

 

அலுவலக நேரங்கள் மற்றும் பாடசாலை நேரங்கள் போன்ற பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மிக அவசியமான காலப்பகுதிகளில் மாத்திரம் பஸ் சேவைகளை வழமை போன்று முன்னெடுக்க வேண்டும்.

 

பகல் வேளைகளில் பயணிகளின் வருகை குறைவாகக் காணப்படும் அத்தியாவசியமற்ற பயணங்களை நான்கில் ஒரு பங்காக (25%) குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 

தேவையற்ற நேரங்களில் பஸ்களை இயக்குவதைக் குறைப்பதன் மூலம் வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்த முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய நாட்டிய கலையரங்கம் திறந்து வைப்பு

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகன்ஸ் 87/88 சாதாரண...

எரிபொருள் QR குறியீடு வழமைக்கு திரும்பியது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR...