Date:

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும், அதன் விலைகள் அதிகரித்துள்ளதாலும், எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில் முடிந்தவரை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் அந்நாட்டு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக ஆரம்பித்துள்ள போர்ச் சூழலினால் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டு, கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுள் வியட்நாமும் உள்ளடங்குகிறது.

வியட்நாம் தனது எரிசக்தித் தேவைகளுக்காக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளிலேயே தங்கியிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

வியட்நாமின் முன்னணி எரிபொருள் வர்த்தக நிறுவனமான பெட்ரோலிமெக்ஸ் (Petrolimex) தரவுகளின்படி, கடந்த மாத இறுதியில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் எரிபொருள் விலைகள் பின்வருமாறு அதிகரித்துள்ளன:

பெற்றோல் – 32%

டீசல் – 56%

மண்ணெண்ணெய் – 80%

விலை அதிகரிப்பு மற்றும் விநியோகக் கட்டுப்பாடு காரணமாக தலைநகர் ஹனோயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் நீண்ட வரிசைகளை இன்று (10) காணக்கூடியதாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...