முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார் வங்கி கணக்கொன்றில், 17 மில்லியன் ரூபாய் பணம் வைப்பிடப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை செவ்வாய்க்கிழமை (10) ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது, பிரதிவாதியான யோஷித ராஜபக்சவை தலா இரண்டு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி கிரிஷாந்தி அமரதுங்க உத்தரவிட்டார்.
மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையினை விதித்த நீதிமன்றம், ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாக வேண்டும் எனவும் கட்டளையிட்டது.






