Date:

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, நிலவும் அதிக வெப்பநிலையால் வெப்பத் தடிப்புகள் (Heat rashes), தோலில் எரிச்சல் மற்றும் பூஞ்சை தொற்று (Fungal infections) போன்ற பொதுவான பாதிப்புகள் ஏற்படக்கூடும். சிறுவர்களின் தோல் மிகவும் மென்மையானது என்பதாலும், அவர்கள் வெளியில் அதிக நேரம் விளையாடுவதாலும் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

 

அதிகப்படியான வெப்பம் சிறுவர்களிடையே நீர் சத்து குறைபாட்டை உண்டாக்கும் எனவும், இதனால் தூக்கமின்மை, சோர்வு மற்றும் பசியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

 

உடல் வெப்பத்தை தணித்தல்: முறையான மேற்பார்வையின் கீழ் சிறுவர்களை நீரில் விளையாட அனுமதிப்பது, அவர்கள் உடல் வெப்பத்தை குறைக்க உதவும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டுப் போட்டிகள்: தற்போது பல பாடசாலைகளில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருவதால், வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின் போது வெப்ப அயற்சி (Heat exhaustion) மற்றும் வெப்பத்தாக்கம் (Heatstroke) குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உப்புச்சத்து இழப்பு: விளையாட்டுகளின் போது அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால், உடலுக்கு அவசியமான சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற உப்புச்சத்துக்கள் குறையக்கூடும். இது மூளை மற்றும் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளைப் பாதிக்கலாம்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்: சிறுவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்துமாறும், அவ்வப்போது இடைவேளைகளை எடுக்குமாறும், அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேரடி சூரிய ஒளியில், குறிப்பாக பகல் நேரத்தின் வெப்பம் அதிகமான வேளைகளில் சிறுவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், அதிகளவில் தண்ணீர் மற்றும் இயற்கை பானங்களை அருந்துவதை ஊக்குவிக்குமாறும் சுகாதார அதிகாரிகள் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...

முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தன கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...