கத்தார் தற்போது ஆரம்ப கட்ட அவசர நிலையை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 48 மணி நேரமாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தடுக்க Patriot பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இவ்வாறு தடுக்கும் போது, கீழே விழும் சிதைவுகள் காரணமாக அபாயங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், டோஹா நகரத்தின் மீது ஏவுகணைகளை தடுக்குவதற்கு பதிலாக, வளைகுடா கடல் பகுதிக்குப் மேல் அவற்றை சுட்டு வீழ்த்தும் நோக்கில் போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய டோஹாவில் கடந்த 10 மணி நேரமாக நிலைமையை கண்காணித்து வந்த நிலையில், எந்த வெடிப்பு சத்தமும் கேட்கப்படவில்லை. சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது தற்போது வெடிப்புகள் தொலைவில் நடைபெறுகின்றன என்றும் நிலைமை சற்றே அமைதியாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.






