Date:

ஈரான் அதி உயர் தலைவர் கொல்லப்பட்டமை உறுதி

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தனர்.

எனினும் அதனை ஈரான் பாதுகாப்பு மற்றும் வௌிவிவகார அமைச்சு மறுத்திருந்தது.

இந்நிலையில், அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தமையை தற்போது ஈரான் அரச ஊடகம் உறுதிப்படுத்தி செய்தி வௌியிட்டுள்ளது.

முன்னதாக அவரது மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் அறிவித்தது.

இதேவேளை ஈரானில் 40 நாட்கள் பொதுத் துக்க காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 7 நாட்களுக்கு அங்கு பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானில் 40 அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் 6 சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல் – ஈரானில் 133 பேர் பலி

ஈரான் மீது சனிக்கிழமை ஆரம்பமான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது...

பஹ்ரைன், குவைட்டில் உள்ள இலங்கையர்கள் கவனத்திற்கு

பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும், மத்திய கிழக்கில்...

ஜோர்டானிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஜோர்டானில்...

Breaking சற்றுமுன் அதிகரித்த எரிபொருள் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள...