லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, இன்றைய தினத்திலிருந்து குறித்த எரிவாயுத் தொகுதிகள் சந்தைக்கு துரிதமாக விநியோகிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீட்டுப் பாவனையாளர்கள் இன்றைய தினத்திலிருந்து வழமை போன்று லாஃப்ஸ் எரிவாயு விற்பனை முகவர்கள் ஊடாகத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.






