இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்துவதன் மூலம் அங்குள்ள மின்பிறப்பாக்கிகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர் கலாநிதி விதுர ரலபனாவ தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் முன்னதாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியும் மின் உற்பத்தி நிலையத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், அடுத்த மாதம் (மார்ச்) முதலாம் திகதி முதல் முழுமையாகப் புதிய நிலக்கரியையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கலாநிதி விதுர ரலபனாவ குறிப்பிட்டுள்ளார்.






