இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி ஆரம்பமாவதற்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ளன.
இன்று (22) பிற்பகல் மத்திய மாகாணத்தில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ள போதிலும், இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடுவதற்காக ரசிகர்கள் தற்போதே பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை ஆறு தடவைகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஐந்து தடவைகள் இங்கிலாந்து அணியே வெற்றியைத் தனதாக்கியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் நடைபெற்ற போட்டியில் மாத்திரமே இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது.
அதற்கமைய, இங்கிலாந்து அணிக்கு எதிராக இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் கடந்த 14 வருடங்களாகத் தொடரும் தோல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடனேயே இலங்கை அணி இன்று களமிறங்கவுள்ளது.






