Date:

விரைவு ரயில் சேவைகள் ஆரம்பம்

கொவிட்-19 தொற்று அதிகரித்ததை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட நகரங்களுக்கு இடையிலான விரைவு ரயில்கள் இன்று (08) சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இரவு தபால் ரயில்கள் உட்பட 301 ரயில் பயணங்கள் இன்று சேவையில் சேர்க்கப்படவுள்ளன.

அத்துடன், இன்று முதல் அனைத்து அலுவலக ரயில்களும் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, நீண்ட தூர ரயில்களை இயக்கியதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக ரயில்களைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள அவர், கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் அதிக ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு ரயில்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்திய அவர், எப்பொழுதும் ரயில்களை பயன்படுத்தும் போது பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...