வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு, வீடாகச் செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாதெனவும் குறிப்பிட்டுள்ளது.
தமது வீட்டின் செல்லுபடியான வாக்காளர் பெயர்ப்பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் 2026ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டிய புதிய பெயர்கள் தொடர்பான தகவல்களை கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்குமாறும் அனைத்து வாக்காளர்களிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் இரண்டு மாத காலத்துக்கு முன்னெடுக்கப்படுவதுடன், அதன் பின்னர் உரிய தகவல்களை உள்ளடக்கிய பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தல், உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக மேற்படி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.






