Date:

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்காலத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

யுகதனவி மின் நிலையத்தின், அரசுக்கு உரித்தான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எவருக்கும் தெரியாத இந்த உடன்படிக்கையை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்தாவிட்டால், பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஒன்றியத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறியப்படுத்தப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டால். பொதுமக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிடும்.

எவ்வாறிருப்பினும், முன்னறிவித்தலின்றி பணிப்புறக்கணிப்புக்கு செல்லத் தயாரில்லை என ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரைஸ், கொத்து, பிரியாணிக்கு இன்று நள்ளிரவுடன் விலை குறைப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய...

பூட்டான் நாட்டு UN பிரதி வதிவிடப் பிரதிநிதியாக பாதில் பாக்கீர் மாக்கார்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) பூட்டான் நாட்டுக்கான பிரதி...

நபிகள் நாயகத்தை கௌரவிக்கும் முகமாக தாமரைத் தடாகம் பச்சை வெள்ளை நிறங்களில் ஒளிரும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினமான (ரபீ – உல்...

(Clicks) மள்வானையில் மாபெரும் மீலாத் நடைபவனி

எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹி...