Date:

25 கோடி பேரை தாக்கிய கொரோனா!

உலகளவில் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 கோடியாக (250,253,524) அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும் நோய் பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 கோடியாக அதிகரித்திருக்கிறது.

தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கொரோனாவால் 4.73 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.75 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.43 கோடி பேர் கொரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.60 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளாக பிரேசில் – 2 கோடி , இங்கிலாந்து – 92 லட்சம், ரஷ்யா – 87 லட்சம், துருக்கி – 82 லட்சம், பிரான்ஸ் -72 லட்சம், அர்ஜென்டினா- 52 லட்சம், ஈரான்- 59 லட்சம், கொலம்பியா – 50 லட்சம் பேர் என்கிற எண்ணிக்கையில் இருக்கிறது.

பலியானவர்களின் எண்ணிக்கை – பிரேசில் (609,417) இந்தியா (460,787), மெக்ஸிகோ (289,413), பெரு (200,373), ரஷ்யா (245,635), இந்தோனேசியா (143,433), இங்கிலாந்து (141,743) இத்தாலி (132,164), கொலம்பியா (127,451), பிரான்ஸ் (118,820) ஈரான் (127,875), அர்ஜென்டினா (116,986).

உலகளவில் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்திருக்கிறது. தொற்றிலிருந்து மீண்டவர்கள் 22 கோடி பேர்.

மேலும் உலகம் முழுவதும் நோயின் தாக்கத்தை குறைக்க இதுவரை 718 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...