Date:

பொங்கல் தினத்தில் ஜனாதிபதி வடமாகாணம் பயணம்

தைப்பொங்கல் தினமான, 15ஆம் திகதி, வடமாகாணத்துக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மூன்று பொங்கல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

 

இதன்படி, மன்னார் மாவட்டத்தின், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடம்பெறும் தைப்பொங்கல் நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

 

அன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வேலனை முருகன் ஆலயத்தில் இடம்பெறும் தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதுடன், மானிப்பாய் மருதாணி ஆலயத்தில் இடம்பெறும் பொங்கல் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

 

இதேவேளை, வடக்கு மாகாணத்திற்கு வருகைதரும் ஜனாதிபதி அத்துமீறிய இந்தியக் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு தீர்வுதர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அகில இலங்கை கடற்றொழில் மற்றும் கமத்தொழில் சமாசத்தின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவருமான என்.பி.சுப்பிரமணியம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

EPF பணம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ், ஓய்வூதிய திட்டத்தினூடாக சலுகைகளை வழங்குவதற்கான திட்டமொன்றை...

சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் மீது அமெரிக்கா தாக்குதல்

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) அமைப்பினர் மீது அமெரிக்கப் படைகள் நேற்று...

தாழமுக்கம் வலுவிழக்கிறது

மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி...

இலங்கைக்காக 2025 ஆம் ஆண்டில் வரலாற்றுச் சாதனை படைத்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள்!

இலங்கையின் 40 வருட கால வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரலாற்றில், அதிகூடிய வெளிநாட்டுப்...