Date:

வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுப்பு!

வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

நேற்று (07) இரவு 11.00 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஆற்றுப் படுக்கைகளை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்புக்கு அமைய, ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அமைந்துள்ள ஆற்று நீரேந்துப் பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என்பதால் இந்த வெள்ள அபாய நிலை உருவாகலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, குறித்த மாவட்டங்களில் உள்ள ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளிலும், நதிக்கரைகளிலும் வசிக்கும் மக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking சவூதி வாழ் இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

மத்திய கிழக்குக்கான பத்து விமானங்களை ரத்து

மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டதால், பிராந்தியத்தில் அதிகரித்து வரும்...

மத்திய கிழக்குக்கான சகல விமான சேவைகளும் இரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதைக் காரணம்...

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்- ஶ்ரீ லங்கன் விமான சேவையிலும் தாமதம்

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு...