முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, நேற்று (05.01.2026) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைகளுக்காக முன்னிலையாகியுள்ளார்.
தனக்குச் சொந்தமான 150 மில்லியன் ரூபா பெறுமதியான காணி ஒன்றைப் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக, அசாத் சாலி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று (05) சி.ஐ.டி. விடுத்திருந்த அழைப்பாணைக்கமைய வாக்குமூலம் அளிப்பதற்காகக் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் அளிக்க இன்று அழைக்கப்பட்டிருந்தேன்.
இந்த நாட்டின் முன்னாள் நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, தனக்குச் சொந்தமான காணி ஒன்றைத் முறைக்கேடான முறையில் அபகரித்தமை தொடர்பிலேயே முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளேன்.
அவர் நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகி, மின்சார சபைக்குப் பொறுப்பாக இருந்த காலப்பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.






