Date:

போக்குவரத்து அபராதங்களை உடனுக்குடன் செலுத்தும் புதிய வசதி!

எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர், Govpay மூலம் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்தும் வாய்ப்பு நாடு முழுவதும் வழங்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பு நாடு தழுவிய அளவில், குறித்த திட்டம் முடிக்கப்படும். Govpay மூலம் நிகல்நிலையில் அபராதங்களை செலுத்தலாம். அதிகாரிகளுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. ஓட்டுநர்கள் பொலிஸாருக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் ஒரு குற்றம். நாங்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் செயல்படுகிறோம். எதிர்காலத்தில் பொலிஸ் எந்த குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகாது.” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சர்ச்சைக்குரிய பாடத் தொகுதி தொடர்பான அறிக்கை சமர்பிப்பு

புதிதாக அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழிப் பாடத் தொகுதியில் (Module),...

டிட்வா சூறாவளி பாதிப்பு : 100 பாடசாலைகளைப் பயன்படுத்த முடியாத நிலை

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 100...

மதுரோவின் விவகாரம்,நாளை அவசரமாக கூடும் ஜ.நா பாதுகாப்பு சபை

வெனிசுவேலா நாட்டின் நீண்டகால ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் மதுரோவை, அமெரிக்கப் படைகள்...

பாடசாலை கல்வி செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும்...