Date:

நாட்டில் மீண்டும் மழை அதிகரிக்கும் சாத்தியம்

இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் தளம்பல் நிலை ஒன்று உருவாகி வருவதன் காரணமாக, வரும் நாட்களில் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுவதுடன், சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை!

இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் உருவாகுவதால், காலி முதல்...

மின் கட்டணம் அதிகரிக்க முன்மொழிவு!

இந்த ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார...

லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்த மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

கொரதொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர்...