Date:

இரண்டு பாடசாலைகளில் 5 மாணவர்களுக்கு கொரோனா!

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து குறித்த பாடசாலைகளின் சில வகுப்புக்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொது சுகாதார வைத்திய காரியாலயத்தின் சுகாதார பரிசோதகர் அனுர விஜெமுனி தெரிவித்தார்.

திஸ்ஸமஹாராம தெபரவெவ ஜனாதிபதி கனிஷ்ட வித்தியாலயத்தின் மூன்று மாணவர்கள் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானதன் காரணமாக அந்த பாடசாலையின் இரண்டு வகுப்புக்கள் மூடப்பட்டன. மேலும் திஸ்ஸமஹாராம எல்லகல ஆரம்ப பாடசாலையின் மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதைத் தொடந்து அப்பாடசாலையின் இரு வகுப்புக்களும் இவ்வாறு மூடப்பட்டன.

இந்நிலையில், குறித்த வைரஸ் பரவலானது ஏனைய மாணவர்களுக்கும் பரவியுள்ளதா என்பதை கண்டறிவதற்காக பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வளியின் தரம் குறைவு! | முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்..!

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட...

இன்று இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் இன்று (21.01.2026) நேற்றையதினத்துடன் ஒப்பிடும்போது அமெரிக்க...

ஆபாசக் காணொளி காட்டிய நபர் கைது

பாடசாலை மாணவர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் ஆபாசக் காணொளிகளைக் காண்பித்த குற்றச்சாட்டில், சந்தேக...

ஜப்பான் முன்னாள் பிரதமரின் கொலையாளிக்கு எதிரான தீர்ப்பு!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கில் டேட்சுயா யாமாகாமிக்கு...