Date:

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!

இன்று (24) கொழும்பு தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில், இலங்கையிலும் இன்று (24) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கப் பவுன் (8 கிராம்) ஒன்றின் விலை இன்று ரூ. 354,000 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று (23) இதன் விலை ரூ. 352,000 ஆகக் காணப்பட்டது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று ரூ. 2,000 இனால் விலை அதிகரித்துள்ளது.

அதேபோல, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று ரூ. 327,500 ஆக பதிவாகியுள்ளது. நேற்று இதன் விலை சுமார் ரூ. 325,600 ஆகக் காணப்பட்டது. இதுவும் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பைக் காட்டுகிறது.

உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,500 அமெரிக்க டொலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளமையே இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குடு ரொஷான் கைது

போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு ரொஷான்' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள...

பிணையில் விடுதலையானார் அர்ச்சுனா எம்.பி

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற...

அர்ச்சுனா எம்.பி. கைது

யாழ்ப்பாண மாவட்ட சு​யேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று புதன்கிழமை (24) கோட்டை...

டித்வாவினால் 4 இலட்சம் பேர் வே​லையை இழந்தனர்

டித்வா புயலினால்  3,74,000 தொழிலாளர்களின் வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன என சர்வதேச தொழிலாளர்...