Date:

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் ஒரே நாளில் 945 பேர் கைது

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தை முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ், டிசம்பர் 20 ஆம் திகதி 945 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கைது செய்யப்பட்டவர்களில் 16 சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

17 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடம் இருந்து 637 கிராம் ஐஸ், 285 கிராம் ஹெரோயின், 3 கிலோகிராம் 432 கிராம் கஞ்சா செடிகள் மற்றும் ஏராளமான பிற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல்...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...