மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் 3 இலக்கமுடைய வான் கதவு இன்று இரவு 9.45 மணிக்கு திறக்கப்பட்டுள்ளதாக அதற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
அதன் படி. 0.5 மீட்டர் அளவில் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1500 கனஅடி வீதத்தில் நீரை முறையாக அம்பன் ஆற்றில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.






