Date:

சிலர் இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளவில்லை – தொற்று நோயியல் பிரிவு

நாட்டின் முழு சனத்தொகையில் 70 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள போதிலும், குறிப்பிட்ட சிலர் இதுவரையிலும் எந்தவொரு தடுப்பூசியையும் பெறாமலுள்ளனர். இவ்வாறானவர்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவர்களாகவே இருப்பர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போதும் நாளாந்தம் 550 – 600 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. இலங்கையில் இதுவரையில் 29 மில்லியன் பேருக்கு முதற்கட்ட தடுப்பூசியேனும் வழங்கப்பட்டுள்ளது. 15 மில்லியன் பேருக்கு முதற்கட்டமாகவும் , 13.4 இரு கட்டங்களாகவும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

20 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையினருக்கு திட்டமிட்ட படி 100 சதவீதம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்த வயது பிரிவினரில் 92.2 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் 16 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையினர் 15.6 மில்லியன் பேர் உள்ளனர். இவர்களில் 96 சதவீதமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசியும் , 83 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டின் முழு சனத்தொகையில் 71 சதவீதமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசியும் , 61.5 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. விசேட தேவையுடைய சிறுவர்களில் 22 832 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

16 – 19 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 8 இலட்சத்து 30 000 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது நூற்றுக்கு 55 சதவீதமாகும். மிக விரைவில் எஞ்சியோருக்கும் தடுப்பூசி வழங்கப்படும். இவ்வாறு தடுப்பூசி வழங்கும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டாலும் இதுவரையிலும் ஒரு தடுப்பூசியையேனும் பெற்றுக் கொள்ளாதவர்கள் உள்ளர்.

இவ்வாறாவர்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட குழுவினருக்கும் ஆபத்தானவர்களாகவே இருப்பர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...