ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பினார்.
இன்று (04) காலை 8.30 அளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம் ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் ஆகியோர் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கடந்த 30 ஆம் திகதி ஸ்கொட்லாந்து பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.