Date:

பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் நீதி அமைச்சர்?

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை குறித்து திருப்திக்கொள்ளாத நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்பியவுடன், தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்க நீதி அமைச்சர் தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.

இதேவேளை, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படுகின்றமை குறித்து தான் அறிந்திருக்கவில்லை எனவும், தனக்கு அறிவிக்காமலேயே இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அலி சப்ரி, ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார்.

நாட்டில் சட்டமொன்றை உருவாக்கும் நிறுவனமொன்று காணப்படுகின்ற நிலையில், இவ்வாறான செயலணி அமைக்கப்பட்டமை தேவையற்ற ஒன்று என அவர் கூறியுள்ளார்.

நீதி அமைச்சின் ஆலோசனைகள் இன்றி, இவ்வாறான செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பில் அலி சப்ரி கவலை அடைந்த நிலையிலேயே, அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இளம் காதலி பரிதாபம் ;கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில்…

கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் 9விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கோஹிலவத்தை...

துப்பாக்கிகளை கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற...

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான...