கண்டி – கொழும்பு வீதியில் கண்டி, பஹால கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
கடும் மழை காரணமாக மண்சரிவு இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்றின்மீது மண்மேடு விழுந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில், அந்த விற்பனை நிலையத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. ஒரு வழி போக்குவரத்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மீட்பு பணி தற்போது இடம்பெற்றுவருகின்றது.






