Date:

வெடித்து சிதைந்த சி-130 விமானம் – 20 பேர் உயிரிழப்பு!

துருக்கி இராணுவத்துக்கு சொந்தமான சி–130 ரக சரக்கு விமானம் நேற்று அசர்பைஜானில் இருந்து புறப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளானது. துருக்கி நோக்கி வந்துகொண்டிருந்த இராணுவ விமானத்தில் 20 பேர் பயணித்திருந்தனர்.

இந்நிலையில், ஜோர்ஜியா நாட்டின் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்தபோது, விமானி கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகி, வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 20 பேரும் உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்ட இடத்தில் தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விபத்துக்கான துல்லியமான காரணத்தை கண்டறிய துருக்கி மற்றும் ஜோர்ஜியா இராணுவ அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரசன்ன ரணதுங்க கைது

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர்...

அரசுக்கு எதிரான பேரணியில் இருந்து விலகிய மரைக்கார்

நுகேகொடயில் எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில், ஜக்கிய மக்கள்...

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் இந்தியா குற்றவாளி!

இந்தியாவின் ஆதரவுடன் செயற்பட்ட பயங்கரவாதிகளே இஸ்லாமாபாத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர்...

ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய...