Date:

சம்பிக்கவுக்கு எதிரான ராஜகிரிய விபத்து வழக்கு விசாரணைக்கு

ராஜகிரிய பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக பணியாற்றிய துஷிதகுமார் மற்றும் வெலிக்கடை காவல்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிரான வழக்கை  விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த முன்னிலையில் இன்று(02) ஆராயப்பட்டது.

இதன்போது, குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 30ம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

வழக்கு விசாரணை இடம்பெறும் தினத்தன்று, பாதிக்கப்பட்ட சந்திப் சம்பத் குணவர்தன உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மேலதிகமாக அவரது சாரதியான திலும் துஸித்த குமார மற்றும் வெலிக்கடை முன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியும் உதவி காவல்துறை அத்தியட்சகருமான சுதஸ் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...