ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும் நீண்ட கால முயற்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது “உலகளாவிய அதிகார யதார்த்தங்களை” அங்கீகரிப்பதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த முயற்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
“பல ஆண்டுகளுக்கு முன்பே, ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசியவன் நான் தான். எனவே, இது எனக்குப் பழைமையான ஒரு தலைப்பு,” என்று அவர் கூறினார்.






