Date:

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

இதற்கமைய ஆதம்பாவா அஸ்வர் வகித்து வந்த நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2025.10.31 அன்று பிரகடனப்படுத்தியுள்ளார்.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கான பிரகடனத்தில் நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் ஒக்டோபர் மாதம் 24ம் திகதி ஒப்பமிட்டு வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைரூஸ் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி பிரதேச சபையின்) உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் நாகலிங்கம் ரேகன் 2025.10.31 அன்று பிரகடனப்படுத்தியுள்ளார்.

 

இது குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கான பிரகடனத்தில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் 10 மாதம் 24ம் திகதி ஒப்பமிட்டு வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...

பாதாள உலகக் குழுக்களினால் உயிராபத்து: விசேட பாதுகாப்பு கோரும் ஞானசார தேரர்

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதானல் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு...