புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள 4 கட்டிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவை பின்வருமாறு:
கொழும்பு -07 கிறகெரி வீதி, இலக்கம் B 88 இல் உள்ள கட்டடம், கொழும்பு- 07 பௌத்தாலோக்க மாவத்த, இலக்கம் C 76, இல் உள்ள கட்டடம், கொழும்பு- 07 விஜேராம வீதி, இலக்கம் B 108, இல் உள்ள கட்டடம், கொழும்பு 07 ஸ்டென்மோர் சந்திரவங்கய, இலக்கம் B 12. கட்டடம், ஆகியனவாகும்.
மேல் நீதிமன்றத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள கொழும்பு 07, விஜேராம வீதியில் உள்ள வீடு, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பயன்படுத்திய வீடு என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன






