Date:

Justin பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும்!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய

மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் பலத்த காற்று வீசும் என ‘அம்பர்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை புதன்கிழமை (29) காலை 11.00 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும்.

வங்காள விரிகுடாவில் இலங்கையின் வடகிழக்கில் உருவாகியுள்ள “மொந்தா” சூறாவளி காரணமாக மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில நேரங்களில் மணிக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடமைகளை பொறுப்பேற்ற அரச புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

அரச புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த...

மதுபான வரி தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவிப்பு

மதுபான உற்பத்தி மீதான வரி செலுத்தும் காலக்கெடு மற்றும் கட்டணங்களை வசூலிப்பதற்கான...

தங்கத்தின் விலையில் எதிர்பாராத பாரிய மாற்றம்

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (28) தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 322,000 ரூபாயாக பதிவாகி உள்ளது. அதன்படி,...

போலிச் செய்தி குறித்த விளக்கம்..!!

கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்...