Date:

திடீரென தீப்பற்றி எரிந்த ரஜரட்ட குயின் ரயில்

அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த ரஜரட்ட குயின் ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ரயிலின் என்ஜினில் ஏற்பட்டுள்ளது என்றும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரயில் மீண்டும் அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அதற்கு வேறு ஒரு என்ஜின் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்தது.

இன்று (25) காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து புறப்படவிருந்த ரஜரட்ட ரெஜிண ரயிலிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக, அந்த ரயில் புறப்படுவது 2 மணித்தியாலங்களுக்கு மேல் தாமதமானதுடன், காலை 7.30 மணியளவில் மீண்டும் பெலியத்தையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தள தடை?

இலங்கையில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான...

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்: 30 பேர்பலி

காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட...

பெற்றோல், டீசல் விலைகளில் வீழ்ச்சி

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம்

எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று...