Date:

தற்போதைய வானிலை காரணமாக டெங்கு அதிகரிக்கும் அபாயம்

நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இலங்கை முழுவதும் நுளம்புகளின் அடர்த்தி அதிகரித்துள்ளது என்று சமூக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.

நேற்றைய (20) நிலவரப்படி, இந்த ஆண்டு மொத்தம் 40,538 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 44.3% பேர் மேல் மாகாணத்திலும், 13.9% பேர் சப்ரகமுவ மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக டெங்கு நோயாளிகள் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் காணப்படவில்லை என்றாலும், தற்போதைய வானிலை காரணமாக அதிகரிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) எச்சரிக்கிறது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் தற்போது அதிக ஆபத்தில் உள்ள மாவட்டங்களாக வைத்தியர் சமரவிக்ரம அடையாளப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில், டெங்கு பரவல் காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் பெரும்பாலானவை இரத்தினபுரியில் நிகழ்ந்துள்ளன.

இந்தக் காலகட்டத்தில் காய்ச்சல், உடல் வலி, தசை வலி, வாந்தி அல்லது குமட்டல் போன்றவற்றை அனுபவிக்கும் எவரும் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் வைத்தியர் சமரவிக்ரம அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள்...

தங்கம் வாங்க தயங்கும் மக்கள்: விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி,...

வௌ்ள அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய...

செயலிழந்த அரச இணைய சேவைகள் வழமைக்கு

இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக...