சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரைபு மசோதா தயார் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா இது குறித்து தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு நம்பிக்கையில்லாப்பிரேரணையை எதுவித நியாயமான காரணங்களும் இன்றி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிராகரித்திருந்தார். அதன் மூலம் நாடாளுமன்றத்தை அவர் பிழையாக வழிநடத்தியிருந்தார்.