Date:

உலக சுகாதார அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாடு மூன்று நாள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus), உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய நிறுவனத்தின் பொறுப்பதிகாரி கத்தரினா போஹ்மே (Katharina Boehme), 8 நாடுகளின் பிரதிநிதிகள், அந்த நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், இரு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இந்த மாநாட்டில் அடுத்த ஆண்டிற்கான பிராந்திய சுகாதார நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேல் பாராளுமன்றில் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பாராளுமன்றமான க்னெசெட் (Knesset) அமர்வில்...

“சுவ செரிய அம்புலன்ஸ் சேவை எனது தனிப்பட்ட சொத்து அல்ல”

அரசாங்கத்தின் கூற்றுகளை மறுத்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

இஸ்ரேலிய பணயக்கைதிகளில் எழுவர் விடுவிப்பு

ஹமாஸ் அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 7 பேர்...

கழிப்பறை வெடித்ததில் ஒருவர் மரணம்

தனது வீட்டில் உள்ள கழிப்பறைகளில் கார்பைடு என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தும்போது கழிப்பறை...