Date:

பெக்கோ சமனின் மனைவியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியின் விளக்கமறியல் அக்டோபர் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இந்த உத்தரவை, வியாழக்கிழமை (09) பிறப்பித்தார்.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் அல்லாமல், கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், பணமோசடி தொடர்பாக சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதவான் குறிப்பிட்டார்.

சந்தேக நபருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக நடந்து வரும் விசாரணைகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் மேலும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், பெக்கோ சமனின் மனைவி உள்ளிட்ட அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 13 வங்கிக் கணக்குகள் மேல் நீதிமன்றத்தின் ஊடாக முடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு, குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...

ஈரானில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா...

நாளை முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என...