Date:

பெக்கோ சமனின் மனைவியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியின் விளக்கமறியல் அக்டோபர் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இந்த உத்தரவை, வியாழக்கிழமை (09) பிறப்பித்தார்.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் அல்லாமல், கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், பணமோசடி தொடர்பாக சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதவான் குறிப்பிட்டார்.

சந்தேக நபருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக நடந்து வரும் விசாரணைகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் மேலும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், பெக்கோ சமனின் மனைவி உள்ளிட்ட அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 13 வங்கிக் கணக்குகள் மேல் நீதிமன்றத்தின் ஊடாக முடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு, குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Power cut update:நாட்டின் பல பிரதேசங்களில் இருளில் மூழ்கிக் கொண்டு செல்கிறது

மோசமான காலநிலையால் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ரண்தம்பே மற்றும் மஹியங்கனை...

அதிவேக வீதிகளில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி

தற்போது முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க எந்தவித...

இலங்கைக்கு அருகில் உருவானது புயல்!

வங்காள விரிகுடாவில் இலங்கை கடற்கரைக்கு அருகில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...

மோசமான வானிலை – உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு!

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று...