Date:

கொழும்பு மாநகர சபை ஊழியர் ஒருவர் கைது

கொழும்பு மாநகர சபையின் அலுவலக உதவியாளர் ஒருவர், நகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் விற்பனை செய்ததாக வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நீண்ட காலமாக தனது அலுவலகத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயினை சூட்சுமமாக பொதி செய்து நகர சபை ஊழியர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் கெம்பல் பூங்காவிற்கு அருகிலுள்ள கொழும்பு மாநகர சபைக் கட்டிடத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார்.

வலான ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு செப்டம்பர் 22 அன்று கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சந்தேக நபரிடம் இருந்து 20,000 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தடுப்பு உத்தரவு பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 355 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...

ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் – விமானப் படை

மீட்பு பணிகள் இடம்பெறும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு...

பாராளுமன்ற அமர்வு இன்று நண்பகலுடன் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் ஆரம்பமானதைத் தொடர்ந்து இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட...

Just in சிலாபம் மருத்துவமணையில் நோயாளர்கள் மீட்பு

சிலாபம் மருத்துவமணையில் இருந்த நோயாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றிய இலங்கை விமானப்படையினர். நாட்டில் ஏற்பட்ட...