Date:

வீதியோரச் சிறுவர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவு

நிறுவனப் பாதுகாப்பில் அல்லது பொறுப்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் வீதியோரச் சிறுவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய,’அர்த்தம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டத்தின் கொடுப்பனவுகள் 2025 ஜூலை மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

‘அர்த்தம்’ வேலைத்திட்டத்திற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள 1,000 மில்லியன் ரூபாய்களை பிள்ளைகளின் உயரிய நலனுக்காகப் பயன்படுத்தக் கூடிய வகையில் 2025 ஜனவரி மாதம் தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு இயலுமை இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

 

அதற்கமைய,’அர்த்தம்’ வேலைத்திட்டத்தின் கொடுப்பனவுகளுக்கான உரித்து ஆரம்பிக்கின்ற திகதி 2025.01.01 எனக் கருத்தில் கொள்வதற்கும், அன்று தொடக்கம் உரித்தான நிலுவையைச் பயன்பெறும் பிள்ளைகளின் கணக்கில் வைப்பிலிடுவதற்கும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...

மின்சார கட்டணத்தில் மாற்றமில்லை

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுக்க விசேட கூட்டம்

சுமார் 8 திணைக்களங்களைப் பாதித்துள்ள அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த,...