Date:

இந்தியா இன்று பாகிஸ்தானுடன் கைகுலுக்குமா

ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (21) சுப்பர் – 4 சுற்றில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஏற்கனவே இந்த தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியிருந்த நிலையில் அதில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

அத்துடன் அன்றைய ஆட்டத்தின் பின்னர் பாகிஸ்தான் வீரர்களுக்கு, இந்திய அணி வீரர்கள் கைகுலுக்குவதை நிராகரித்தமை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இந்திய அணி அவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் பாகிஸ்தான் அணி அதிருப்தி வௌியிட்ட நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையிலும் முறைப்பாடளித்திருந்தது.

பின்னர் அந்த சம்பவத்தை கண்டித்து ஐக்கிய அரபு இராச்சியம் அணியுடனான போட்டியின் ​போது மைதானத்திற்கு தாமதமாகவே பாகிஸ்தான் அணி வந்தது.

இதனால் மேலும் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ள நிலையில் போட்டிக்கு முன்னதாக இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பை பாகிஸ்தான் அணி புறக்கணித்துள்ளது.

இவ்வாறான சூழலில் போட்டியின் வெற்றி, தோல்வி ஒருபுறம் இருக்க, இரண்டு அணி வீரர்களும் இன்று கைகுலுக்குவார்களா என்பதையே கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

47 இஸ்ரேல் பணயக் கைதிகள் தொடர்பில் ஹமாஸ் விடுத்துள்ள எச்சரிக்கை

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 47 இஸ்ரேலிய பணயக் கைதிகளின் புகைப்படங்களை...

43 சிறுவர்கள் சைபரில் வன்புணர்வு

2024/2025 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 43 சிறுவர்கள் சைபரில் பாலியல்...

ஜனாதிபதி நாளை அமெரிக்காவுக்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (செப்டம்பர் 22) அமெரிக்காவிற்கு புறப்பட்டு செல்லவுள்ளார். ஐக்கிய...

கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் திடீர் மரணம்

கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளரான 47 வயதுடைய மஹீல் முனசிங்க ஞாயிற்றுக்கிழமை...