தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம 12.3 மைல் கல்லுக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 1969 அம்பியூலன்ஸ் உள்ளிட்ட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களுள் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.