Date:

மாணவர்களுக்கு வௌிநாட்டு சிகரெட்டை விற்ற வர்த்தகர் கைது

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் வர்த்தகர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பல்வேறு சுவைகள் கொண்ட இந்த சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்காக பாடசாலை மாணவர் ஒருவருக்கு அவர் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

ஒரு சிகரெட்டை மாணவருக்கு 100 ரூபாவிற்கு வர்த்தகர் வழங்கியுள்ளதுடன், அம்மாணவர் பாடசாலையில் சிகரெட் ஒன்றை 200 ரூபாவிற்கு விற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 

அதே பாடசாலையின் மாணவர் ஒருவர் அதிபருக்கு அளித்த முறைப்பாட்டுக்கு அமைய சிகரெட்டுகளை விற்பனை செய்த மாணவனை அழைத்து வந்து சோதனை செய்த போது, ​​மாணவரிடம் இருந்து இரண்டு வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

பின்னர், தனமல்வில பொலிஸ் பரிசோதகருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, குறித்த வர்த்தக நிலையம் சோதனை செய்யப்பட்டு, வர்த்தகரிடம் இருந்த 690 சிகரெட்டுகளும், சிகரெட்டுகளை விற்று ஈட்டிய 360,000 ரூபாய் பணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

சந்தேக நபர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...