Date:

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

எதிர்வரும் வியாழக்கிழமை (18) கொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரைப் பெறும் பிரதான உள்ளீட்டு பம்பிங் நிலையத்தில் ஏற்பட்ட மின் தடையின் காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை மறுதினம் முற்பகல் 10.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை 12.30 மணி வரையில் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் நீர் விநியோகம் தடைபடும்.

அதேநேரம் பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐடிஎச், கொட்டிகாவத்த, அங்கொடை, வெல்லம்பிட்டி, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவ ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் டிஜிட்டல் புரட்சி

அரசாங்கத்தின் "டிஜிட்டல் இலங்கை" தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய பண்பாட்டு...

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சரண்

வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த...

மூன்று நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி...

சில நாட்களுக்கும் மழை தொடரும்

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை...