கலேவெல பகுதியில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தேவஹுவ, கலேவெல பகுதியைச் சேர்ந்த சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இறந்த சிறுவன் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றபோது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து சிறுவனை மீட்டு கலேவெல வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும், அவர் உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது