Date:

இலங்கை அணிக்கு அபார வெற்றி

ஆசிய கிண்ண டி20 தொடரின் குழு B பிரிவில் இன்று (13) நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் ஷமிம் ஹொசைன் அதிகபட்சமாக 42 ஓட்டங்களையும், ஜாக்கர் அலி ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்படி, 140 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 14.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 50 ஓட்டங்களையும், ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய கமில் மிஷார 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குமார் சங்கக்காரவின் உலகளாவிய வேண்டுகோள்

பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கிலிருந்து மீள்வதற்கு சுற்றுலா ஒரு...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்

மலையகப் பகுதிகளில் ஏற்படவிருக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை குறித்து  தேசிய கட்டிட...

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் டிஜிட்டல் புரட்சி

அரசாங்கத்தின் "டிஜிட்டல் இலங்கை" தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய பண்பாட்டு...

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சரண்

வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த...