Date:

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான பல்லாண்டு கால மோதலை முடிவுக்கு கொண்டுவர “உறுதியான, காலவரையறையுடன் கூடிய மற்றும் மாற்ற முடியாத” நடவடிக்கைகளை வலியுறுத்தும் ஒரு பிரகடனத்திற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.

இந்த ஏழு பக்க அறிக்கை, கடந்த ஜூலை மாதம் ஐ.நா.வில் சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் இணைந்து நடத்திய சர்வதேச மாநாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த மாநாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் புறக்கணித்தன.

இந்தத் தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும், 12 நாடுகள் வாக்களிக்காமலும் இருந்தன. இலங்கை உள்ளிட்ட நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகள் தீர்வு அடிப்படையாக அமைய வேண்டும் என இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அது கோருகிறது.

உலகத் தலைவர்கள் ஐ.நா.வில் கூடவிருக்கும் நிலையில், அமைதி செயல்முறையின் எதிர்காலம் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை -...