Date:

நோர்வூட் விபத்தில் பாலர் பாடசாலை குழந்தைகள் அறுவர் காயம்

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் நியூவெலிகம பகுதியில், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று எதிர் திசையில் பயணித்த காருடன் மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பாலர் பாடசாலை மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று (12) காலை 8.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியின் முன் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பற்ற உதிரி பாகம், காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

காரை ஓட்டிச் சென்ற பெண் சந்தேகத்தின் பேரில் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில், ஒரு பிள்ளையை தவிர ஏனைய ஆறு பேரும் சிகிச்சை பெற்று வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

13.56% ஆல் அதிகரிக்கும் மின் கட்டணம்

மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையினால் இலங்கை...

பலத்த மின்னல் குறித்து கடுமையான எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (14) முற்பகல் 11.30...

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பில் சுற்றறிக்கை

நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கைகளை டிசம்பர் 31ஆம்...

நுவரெலியாவில் ரோஜாப் பூவின் விலை சடுதியாக அதிகரிப்பு

காதலர் தினத்தை முன்னிட்டு மலர் கடைகளில் கடந்த ஒரு வார காலமாகவே...