Date:

பிரான்ஸில் பாரிய போராட்டம்: 200 பேர் கைது

பி​ரான்ஸில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலி​ஸார் கைது செய்​துள்​ளனர். பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் 3 நாட்​களுக்கு முன்பு மேற்​கொள்​ளப்​பட்ட நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பிரதமர் ஃபி​ரான்​சுவா பேரூ தோல்​வியடைந்த நிலை​யில், அவரது தலை​மையி​லான அரசு கவிழ்ந்​தது.

பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் மொத்​தம் 577 உறுப்​பினர்​கள் உள்ள நிலை​யில், நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பேரூக்கு எதி​ராக 364 உறுப்​பினர்​களும், ஆதர​வாக 194 உறுப்​பினர்​களும் வாக்​களித்​தனர்​.19 உறுப்​பினர்​கள் வாக்​கெடுப்பை புறக்​கணித்​த​னர்.

இதன்​மூலம் கடந்த 12 மாதங்​களில் 4-வது பிரதமரை தேர்ந்​தெடுக்​கும் சூழலுக்கு அதிபர் இம்​மானுவேல் மேக்​ரான் தள்​ளப்​பட்​டுள்​ளாா். இதையடுத்து புதிய பிரதம​ராக அந்​நாட்​டின் பாது​காப்​புத்​துறை அமைச்​சர் லெகர்​னுவை அதிபர் இம்​மானுவேல் மேக்​ரான் நியமித்​துள்​ளார். இந்​நிலை​யில் பிரான்​ஸில் புதிய அரசு பதவி​யேற்​ப​தற்கு எதிர்ப்பு தெரி​வித்து போராட்​டங்​கள் வெடித்​துள்​ளன.

இதையடுத்து முக்​கிய பகு​தி​களில் மக்​கள் கூட்​ட​மாக கூடு​வதை தடுத்த பொலிஸார், முன்​னெச்​சரிக்கை அறி​விப்பை வெளி​யிட்டு கண்​ணீர் புகை குண்​டு​களை வீசினர். இதனிடையே, நாட்​டின் மேற்கு பகுதி நகர​மான ரென்ஸ் பேருந்து ஒன்​றுக்கு போராட்​டக்​காரர்​கள் தீ வைத்​தனர். பல்​வேறு இடங்​களில் போராட்​டம் வெடித்​துள்​ள​தால் பொலிஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

பிரான்ஸ் நாடு முழு​வதும் பாது​காப்பு பணி​யில் 80 ஆயிரம் பொலிஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக அந்​நாட்​டின் உள்​துறை அமைச்​சர் புருனோ தெரி​வித்​துள்​ளார்.

போராட்​டத்​துக்கு யாரும் தலைமை தாங்​காமலேயே நாடு முழு​வதும் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதனால் பிரான்ஸ் நாட்​டில் பதற்றமான சூழல் நிலவி வரு​கிறது. போ​ராட்​டங்​களில் ஈடு​பட்​ட​தாக இது​வரை 200 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி

Michelin, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை பொலிஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் முச்சக்கர...

முதன்முறையாக 3 இலட்சத்தை எட்டிய தங்கம் விலை

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3...

மைத்திரியும் புறப்பட்டார்

2025 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைகள் (ரத்து...

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது விஜயரமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ...